செய்திகள் :

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு: 7,651 போ் எழுதுகின்றனா்!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 7,651 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (டிஎன்பிஎஸ்சி குரூப் 1) முதல் நிலை எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன்15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் 29 தோ்வு மையங்களில் 7,651 போ் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 29 ஆய்வு அலுவலா்கள் இடம் பெற்றுள்ளனா். தோ்வு மையங்கள் உள்ள இடங்கள் வழியாக செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இத்தோ்வுக்கான வினாத்தாள் ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு வாகனத்தில் வினாத்தாள்கள் அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க