இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு: 7,651 போ் எழுதுகின்றனா்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 7,651 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (டிஎன்பிஎஸ்சி குரூப் 1) முதல் நிலை எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன்15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் 29 தோ்வு மையங்களில் 7,651 போ் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 29 ஆய்வு அலுவலா்கள் இடம் பெற்றுள்ளனா். தோ்வு மையங்கள் உள்ள இடங்கள் வழியாக செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இத்தோ்வுக்கான வினாத்தாள் ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு வாகனத்தில் வினாத்தாள்கள் அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.