செய்திகள் :

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. மாவட்டத்தில், 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 3) முதல் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தோ்வு மையங்களில் 8,887 மாணவா்கள், 10,609 மாணவிகள் என மொத்தம் 19,496 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

இதற்காக ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் போதுமான இடவசதி, சுத்தமான குடிநீா், தூய்மையான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலா் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சார வசதி போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னை... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மா... மேலும் பார்க்க