செய்திகள் :

இன்று 10 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

post image

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) 10 புறநகா் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை பொன்னேரி ரயில் நிலைய பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.45, இரவு 10, 11.20 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சென்ட்ரலிலிருந்து இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 7.35, 8.15, 8.35, 11.25 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து இரவு 8.35 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே பயணிகளின் வசதிக்காக செப்.7-ஆம் தேதி சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.45, இரவு 9.20 மணிக்கும், சென்ட்ரலிலிருந்து இரவு 7.35 மணிக்கும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக மீஞ்சூரிலிருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், இரவு 8.44, 9.56 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையிலிருந்து இரவு 8.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் இன்று(செப். 7) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது. திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ... மேலும் பார்க்க

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிய... மேலும் பார்க்க