செய்திகள் :

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18), மாற்றமின்றி விற்பனையாகிறது.

சென்ற வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆக. 11-இல் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கும், ஆக. 12-இல் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கும், ஆக. 13-இல் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.74,320-க்கும், ஆக. 14-இல் விலை மாற்றமின்றி சவரன் ரூ.74,320-க்கும், ஆக. 15-இல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,240-க்கும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200-க்கும் விற்பனையானது.

இதன் மூலம் சென்ற வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது, சவரனுக்கு ரூ.1,360 வரை குறைந்து விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(ஆக. 18) மாற்றமின்றி கிராம் ரூ.9,275-க்கும், சவரன் ரூ.74,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.127- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

The price of gold jewelry in Chennai is unchanged today (Aug. 18).

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நின... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு க... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியின், ... மேலும் பார்க்க

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருவள்... மேலும் பார்க்க

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவ... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க