செய்திகள் :

இபிஎஸ்ஸுடன் கருத்து வேறுபாடு? - "நான் மனம் திறந்து பேசப்போகிறேன்" - செங்கோட்டையன் சொல்வது என்ன?

post image

கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதில், அதிமுக-வின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். அதேபோல தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இதனால் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதல் வெளிப்படையாகத் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் டெல்லிக்குச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது, சட்டமன்ற கூட்டத்தொடரில் தனியாகச் செல்வது எனத் தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் கருத்துமோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் நடந்த அதிமுக பிரசாரப் பயணத்திற்குக் கூட செங்கோட்டையன் வராததால், அவர் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரசாரங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுகிறார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2) ஈரோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அதனை உறுதியும் செய்திருக்கிறார்.

"செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று கோபிசெட்டிபாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப்போகிறேன். அப்போது நான் என்ன சொல்லப்போகிறேன் என்று நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்.

இன்று செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை ... மேலும் பார்க்க

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையு... மேலும் பார்க்க

மனோஜ் ஜராங்கே கோரிக்கையை ஏற்ற அரசு; முடிவுக்கு வரும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே 30 ஆயிரம் மராத்தா இன மக்களோடு சேர்ந்து மும்பையில் கடந்த 29ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பையின் தென்பகுதியில் உள்... மேலும் பார்க்க

Bihar Election: "RJD, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்" - பிரதமர் மோடி

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து நடத்திய பேரணியில் தன்னையும் தனது தாயையும் குறித்து ஆபாசமான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.இந்தக் கோஷங்கள் நாட்டிலுள்ள ஒட... மேலும் பார்க்க

மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்; கண்டிக்கும் அரசு - என்ன பிரச்னை?

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பெரும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நடந்து வருகிறது.இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எதிரானது.இ... மேலும் பார்க்க

உள்ளூர் பிரச்னைகள் டு லோக்கல் மினிஸ்டர்ஸ் அட்டாக் வரை.! - விஜய்யின் சுற்றுப்பயண பிளான் என்ன?

மதுரையில் மாநாட்டை முடித்த கையோடு சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார் தவெக தலைவர் விஜய். சுற்றுப்பயணத்துக்காக பிரத்யேகமாக ஒரு பிரசார வாகனத்தையும் ஏற்பாடு செய்து பனையூர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திர... மேலும் பார்க்க