தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!
`இப்படியெல்லாம் நடக்குமா?' - திருமணமான ஒரே மாதத்தில் சடலமான கணவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
ஆந்திரா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என்பவருக்கும் தெலுங்கானாவின் கட்வாலிலை சேர்ந்த தேஜேஸ்வர் (26) என்பவருக்கும் மே -18 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்குப் பிறகு இருவரும் நெருக்காமாக இருந்தனர். இவர்கள் நல்ல ஜோடி என ஊர் மக்களும், உறவினர்களும் சொல்லும் அளவுக்கு அன்பாக இருந்தனர்.
இதற்கிடையில், திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தேஜேஸ்வர் காணாமல் போனார். அவரை தேடியபோது ஆந்திராவில் ஒரு கால்வாயில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தேஜஸ்வரை யார் கொலை செய்தது என காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
குற்றச்சாட்டு:
தேஜேஸ்வரின் மர்ம கொலையில், அவரின் மனைவி ஐஸ்வர்யாவின் பங்கு இருக்கலாம் என சந்தேகிப்பதாக தேஜஸ்வரின் குடும்பத்தினர் காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் காவல்துறை விசாரணை தொடங்கியதில், ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவுக்கும் இந்தக் கொலையில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, காவல்துறை இருவரையும் கைது செய்தது.
கொலைக்கு காரணம்:
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனத்தில் (NBFC) மேலாளராக பணிபுரிந்தவர் திருமால் ராவ். அதே வங்கியில் ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதா தூய்மை பணியாளராக வேலை செய்திருக்கிறார். அப்போது சுஜாதாவுக்கும் திருமால் ராவ்வுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
சில நேரங்களில் சுஜாதாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா அந்தப் பணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டபோது, திருமால் ராவ் ஐஸ்வர்யாவிடம் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். திருமால் ராவ்வுக்கு திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ள தன் மனைவியை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து திட்டமிட்டிருசெய்க்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு திருமால் ராவ்வுடனான தொடர்பு குறித்து அறிந்த சுஜாதா, ஐஸ்வர்யாவை தேஜேஸ்வருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் திருமணத்தன்று கூட ஐஸ்வர்யா திருமால் ராவ்வுடன் பேசிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணம் நடந்த பிப்ரவரி முதல் ஜூன் வரை 2000 முறை பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது.
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் என் அம்மாவால் வரதட்சணை கொடுக்க முடியாவில்லை அதனால் எனக்கு உங்களுடன் இருக்க முடியவில்லை என எழுதிவைத்துவிட்டு, திருமால் ராவ்வை திருமணம் செய்துகொள்ள திட்டமித்திருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் இது நம்பும்படி இல்லை என்பதால் கொலை திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
கொலைத் திட்டம்:
இந்த வழக்கை ஆந்திரா தெலங்கானா என இரு மாநில காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். அதில், ``திருமணமான ஒரு மாதத்திற்குள், ஐஸ்வர்யா திருமால் ராவ்வுடன் சேர்ந்து தன் கணவரை கொலை செய்ய மூன்று பேரை நியமித்திருக்கிறார். தேஜேஸ்வரைக் கொலை செய்வதற்காக லோன் கேட்டு வந்த மூன்று பேருக்கு ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்திருக்கிறார்.

தேஜஸ்வர் கொலை செய்யப்பட்டது யாருக்கும் தெரியாது. எனவே ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு லடாக் தப்பிச்சென்று புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என ரூ.20 லட்சம் கடன் வாங்கி தனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் லடாக்கிற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருக்கிறார். ஆனால் தேஜஸ்வரூக்கு ஐஸ்வர்யா - திருமால் ராவ் தொடர்பான தகவல்கள் ஏற்கெனவே தெரியும் என்றும், அதனால் இந்த திருமணத்தை குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
கொலை:
ஜூன் 18-ம் தேதி நில அளவை தொழில் செய்யும் தேஜஸ்வரை ஒரு நிலம் அளக்க வேண்டும் என மூன்றுபேர் ஒரு காரில் அழைத்துச் செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதை தொடர்ந்து நடந்த விசாரணையில், திருமால் ராவ் ஏற்பாடு செய்திருந்த மூன்றுபேரும் தேஜஸ்வரை காரில் வைத்து கழுத்தை அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்திருக்கின்றனர். அவர்கள் அளக்க வேண்டும் எனக் கூறிய இடத்தில் புதைக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அங்கு ஆள் நடமாட்டம் இருந்ததால், இறந்த உடலை திருமால் ராவிடம் தொலைபேசியில் காட்டிவிட்டு, கால்வாயில் வீசிச் சென்றிருக்கின்றனர். ஆனால் இந்தக் கொலை நடந்தது தெரிந்தும் ஐஸ்வர்யா சுமார் 4 நாள்கள் தேஜஸ்வர் வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா, திருமால் ராவ், சுஜாதா, திருமால் ராவை காப்பாற்ற முயன்ற அவரின் தந்தை ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் உள்பட எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.