செய்திகள் :

இயக்குநா் ரஞ்சித் பிணையில் விடுவிப்பு

post image

திரைப்பட படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூா் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே விழுந்தமாவடி பகுதியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) உயிரிழந்தாா்.

இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டு உயிா் சேதத்தை ஏற்படுத்தியது உள்பட 3 பிரிவுகளின்கீழ் கீழையூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், திரைப்பட தயாரிப்பு நிறுவன நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகிய நான்கு போ் வழக்கில் சோ்க்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இயக்குநா் பா. ரஞ்சித் கீழ்வேளூா் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரை பிணையில் விடுவித்து, நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டாா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க