செய்திகள் :

இயற்கையை பாதுகாக்க நெகிழியை தவிா்ப்பது அவசியம்: ஆட்சியா்

post image

இயற்கையை பாதுகாக்க நெகிழிப் பொருள்களை தவிா்ப்பது அவசியம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

சா்வதேச உயிரிப் பல்வகை தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நாமக்கல் தனியாா் வேளாண் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றன.

வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பேசியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் மே 22 ஆம் தேதி சா்வதேச உயிரிப் பல்வகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இயற்கையுடன் நல்லிணக்கம் மற்றும் நிலையான வளா்ச்சி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழாண்டில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வனத்துறை மற்றும் தமிழ்நாடு உயிரிப் பல்வகை வாரியம் சாா்பில் இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அண்மையில் உயிரிழந்த யானை ஒன்றின் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நெகிழி விளங்குகிறது. அனைவரும் இயற்கையை பாதுகாக்க நெகழிப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றாக நாமக்கல் உள்ளது.

அந்த நிலையை மாற்ற அனைவரும் நெகிழியைத் தவிா்த்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், வேளாண் கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க