செய்திகள் :

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

post image

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் நேற்று இரவு 10:30 மணியளவில் ஹரிஷ், ஹரி சக்தி இருவரையும் வெட்டி படுகொலைசெய்தனர். சாராய விற்பனையை தட்டி கேட்டதால் தான் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

போலீஸ் கைது செய்துள்ள குற்றவாளிகள்

``சாராய விற்பனை செய்யப்படுவது தொடர்பாக எட்டு முறை சம்பந்தப்பட்ட பெரம்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளேம். ஆனால் போலீஸ் மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. காலையில் கைது செய்தால் மாலையில் வெளியே வந்து விடுவர். இப்படித்தான் போலீஸ் நடவடிக்கை இருக்கிறது" எனக் குற்றம்சாட்டினர். மேலும் ஆத்திரத்தில் சாராய வியாபாரிகள் வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

இறந்த இருவரது உடல்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மயிலாடுதுறை- தஞ்சை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இருவர் கொலைக்கு சாராய விற்பனை காரணம் இல்லை. ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறுதான் காரணம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது, ``கடந்த 13ம் தேதி இரவு வடக்குத் தெருவில் மூவேந்தன் நின்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ், மூவேந்தனிடம் கூச்சலிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு, தினேஷ், ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோர் தெரிவில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நண்பர்களான மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோர் மதுபோதையில் தினேஷை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். இதை தடுக்க வந்த ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோரை கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதில் ஹரிஷ், ஹரி சக்தி இறந்து விட்டனர். கொலைக்கு காரணமான மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோரை கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த இருக்கிறோம். மது விற்பனை தொடர்பாக இரட்டை கொலை நடந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஒரே ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறுதான் கொலைக்குக் காரணம். உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்ப வேண்டாம்" என போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சமய் ரெய்னா என்ற ... மேலும் பார்க்க

` வழக்கறிஞர் மீது தாக்குதல்' -திமுக அலுவலம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார்43. இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவரின் மகளை அழைக்க டூவிலரி... மேலும் பார்க்க

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது ... மேலும் பார்க்க

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்; குழம்பிய போலீஸ்... படம் வரைந்து காட்டிக்கொடுத்த மகள்!

உத்தரப்பிரதேசத்தில், மனைவியைக் கணவன் கொலைசெய்து நாடகமாடிய சம்பவத்தில், மகளால் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, ஜான்சியில் கோட்வாலி பகு... மேலும் பார்க்க