செய்திகள் :

இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

post image

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்தன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதையும் படிக்க:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!

துபையில் நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், நாளை மறுநாள் (மார்ச் 5) லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் விளையாடவுள்ளன.

ரோஹித் சர்மா பேசியதென்ன?

முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடைசி மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதே போலவே நாளை நடைபெறும் போட்டியிலும் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் நடுவே சில பதற்றமான சூழல்களும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் அவ்வாறுதான் இருக்கின்றன. கண்டிப்பாக அழுத்தம் என்பது இரண்டு அணிகளுக்குமே இருக்கும் என்றார்.

இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்குப் பிறகு, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.குரூப் சுற்றில் இந்தியா தனது 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்று தகுந்த... மேலும் பார்க்க

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளத... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவை உருவகேலி செய்து சமூக வலைதளப் பதிவு: பிசிசிஐ எதிர்வினை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வல... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்று... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள... மேலும் பார்க்க