செய்திகள் :

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

post image

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (85). இவா், கடந்த மே 27-ஆம் தேதி காணாமல் போனதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், கல்வாா்பட்டி ஊராட்சி காந்தி நகா் ரங்கமலைப் பகுதியில் சுமாா் 500 மீட்டா் உயரத்தில் முதியவா் ஒருவா் இறந்து எலும்புக்கூடாக கிடப்பதாக கூம்பூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் எலும்புக்கூட்டின் அருகே கிடந்த காவி வேட்டி, துண்டு, வளைவான கைத்தடி, பூச்சி மருந்து புட்டி உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரித்தனா்.

இதனிடையே, சுக்காம்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமியின் மகன் கோபாலுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கோபால், இறந்தது முத்துச்சாமிதான் என்பதை உறுதிப்படுத்தினாா்.

இதையடுத்து முத்துசாமியின் எஞ்சிய சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கூம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க

‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’

பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூ... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுட... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க