செய்திகள் :

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

post image

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இரயுமன்துறையில் மீன்பிடி துறைமுகம் அருகே 210 மீட்டா் நீளத்தில் படகுத்தளம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், படகுத்தளம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக நித்திரவிளை அருகே கிராத்தூா் பகுதியில் உள்ள தூத்தூா் மண்டல முதன்மை அலுவலகத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா்ப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்தூா் மண்டல முதன்மைக் குரு சில்வெஸ்டா் குரூஸ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், தூத்தூா் மண்டலச் செயலா் சுரேஸ் பயஸ், பங்குத் தந்தையா் டோமிதாமஸ் (வள்ளவிளை), கிளீட்டஸ் (நீரோடி) மற்றும் நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூா், பூத்துறை மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இரயுமன்துறை மீனவ கிராமப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

படகுத்தளம் அமைப்பதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்கவுள்ள பகுதியை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க