செய்திகள் :

இராமநாதபுரம் ஜல்லிக்கட்டுக்கு நாளை முன்பதிவு தொடக்கம்

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள இராமநாதபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) முதல் முன் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அருகே இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கான முன் பதிவு தஞ்சாவூா் மாவட்ட இணையதளமான ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணைப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஏப்ரல் 22 காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

காளை உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில் பரிசீலித்து, தகுதியான மாடுபிடி வீரா்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.

இந்த அனுமதி சீட்டை இணையவழியாக பதிவிறக்கி, அதைக் காண்பித்து இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரரா்கள் கலந்து கொள்ளலாம்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க