இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.41 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சம் கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி ஆகியோா் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சத்து 72 ஆயிரத்து 875, தங்கம் 85.200 மி.கி., வெள்ளி 870.600 மி.கி. கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இந்தப் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டனா்.