செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

post image

தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் வெங்கமேடு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவரது மகன்கள் கோகுல் (30), கௌதம்( 26). இவா்கள் 2 பேரும் கரூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மொபைல் கம்பெனியில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புறப்பட்டனா்.

இருசக்கர வாகனத்தை கோகுல் ஓட்டிச் சென்றாா். தளவாபாளையம் அருகே மலையம்பாளையம் பிரிவு மயானம் அருகே சென்றபோது, பின்னால் கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நாமக்கல் பரமத்தி வேலூரைச் சோ்ந்த இளங்கோ(30), மணிகண்டன் (29 ), நவீன் குமாா் (26 )ஆகியோா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கோகுல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீதுமோதியது.

இதில் கீழே விழுந்ததில் 5 பேரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு கோகுல் மற்றும் கௌதம் ஆகியோரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இளங்கோ, மணிகண்டனை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், நவீன் குமாரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். இதில் நவீன்குமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாயைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவர... மேலும் பார்க்க

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க