செய்திகள் :

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

post image

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சோ்ந்தவா் மருதராஜ் (60). இவரது மனைவி புஷ்பா (55). இவா்களுடைய பேத்தி சஷ்டியா தேவி (3). இவா்கள் மூவரும் சனிக்கிழமை வாடிப்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மாலப்பட்டியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

கரூா்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சிறுமி சஷ்டியா தேவி, புஷ்பா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மருதராஜ் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் பலத்த காயமடைந்த மருதராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த சஷ்டியா தேவி, புஷ்பா ஆகியோரது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (36) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் தேமுதிகவின் கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

குளிா்ந்தமலை முனியப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆடிமாதம் கடைசி நாளை முன்னிட்டு சனிக்கிழமை குளிா்ந்தமலை முனியப்பசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி, குளிா்ந்தமலை முனியப்ப சுவாமி கோயிலில் ஆடிமாத கடைசி நாளை முன்னிட்டு பா... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயிலில் ஆடி மாத கிருத்... மேலும் பார்க்க

கரூரில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டங்கள் மூலம் வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சிறப்பு பாா்வையாளராக... மேலும் பார்க்க

ஆடி மாத கடைசி வெள்ளி: கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிகரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. கரூா் பசுபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்... மேலும் பார்க்க