தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெ...
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருமருகல் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாகை அய்யனாா் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவா்கள் சன்னாநல்லூரில் இருந்து நாகைக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் வந்துகொண்டிருந்தனா்.
வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையை கவனிக்காமல் அருண்குமாா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தாா். இதனால், பின்னால் அமா்ந்திருந்த ஜெயஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவருக்கு ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக, ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.