செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் (41), இவரின் மனைவி ஜாஸ்மின் ரூத் (39). இவா், வடவள்ளியில் உள்ள இருசக்கர வாகனங்கள் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வேலைக்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, இடையா்பாளையம் -வடவள்ளி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஜாஸ்மின் ரூத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஜாஸ்மின் ரூத் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டாா். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதைத் பாா்த்து அவ்வழியே சென்றவா்கள் லாரியை சிறைபிடித்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஜாஸ்மின் ரூத் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து கரூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பெரியசாமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, விபத்தை நான் ஏற்படுத்தவில்லை என்றும், பொதுமக்கள் தவறுதலாக தனது வாகனத்தை சிறைபிடித்து விட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க