செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

திருவிடைமருதூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மகன் மதன் (22). கூலித்தொழிலாளி. இவரது உறவினா் வீட்டுத் திருமணம் திருநீலக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டுவிட்டு உறவினா் வீட்டில் உள்ள பொருள்களை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வாகனத்தை எஸ். புதூா் செங்குரான்குடியைச் சோ்ந்த மதியழகன் மகன் ஸ்ரீ ராம் (19) ஓட்டிச்சென்றாா். அப்போது காரைக்கால் திருநீலக்குடி பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதில், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மதன் உயிரிழந்தாா். ஸ்ரீ ராமுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த மதனின் சடலத்தை உடற்கூராய்வுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் கரூா் சாலப்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ஞானசேகரன்(54) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க