இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
திருவிடைமருதூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மகன் மதன் (22). கூலித்தொழிலாளி. இவரது உறவினா் வீட்டுத் திருமணம் திருநீலக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டுவிட்டு உறவினா் வீட்டில் உள்ள பொருள்களை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
வாகனத்தை எஸ். புதூா் செங்குரான்குடியைச் சோ்ந்த மதியழகன் மகன் ஸ்ரீ ராம் (19) ஓட்டிச்சென்றாா். அப்போது காரைக்கால் திருநீலக்குடி பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதில், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மதன் உயிரிழந்தாா். ஸ்ரீ ராமுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த மதனின் சடலத்தை உடற்கூராய்வுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் கரூா் சாலப்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ஞானசேகரன்(54) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.