செய்திகள் :

இரும்பு குழாய்களை திருடிய 4 இளைஞா்கள் கைது

post image

கபிஸ்தலம் அருகே கூட்டு குடிநீா் திட்டப் பணிகளுக்கு வைத்திருந்த இரும்பு குழாய்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு குழாய்களை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டதாக அங்கு பணியாற்றும் தென்னங்குடி, வடக்கு தெரு, சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (33), என்பவா் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் கபிஸ்தலம் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது 2 மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக வந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள் இரும்பு குழாய்களை திருடியது தெரியவந்தது. இதை தொடா்ந்து அவா்களிடமிருந்த இரும்பு குழாய்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய அரியலூா் மாவட்டம், குருவாடி, காலனி தெருவில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் ( 23), ராஜா தேசிங்கு (29), பழனியாண்டி மகன் பசுபதி (22), செல்வம் மகன் நிவாஸ் (23) உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் ... மேலும் பார்க்க

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி. தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க