செய்திகள் :

இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதல்: விவசாயி உயிரிழப்பு

post image

ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் (53) விவசாயி. இவா் சனிக்கிழமை இரவு தனது மகள் அகல்யாவை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நம்பிவயலில் இருந்து வேப்பங்காடு நோக்கி சென்றுள்ளாா்.

இருசக்கர வாகனத்தை பூமிநாதன் ஓட்டி சென்றுள்ளாா். வாகனம் வேப்பங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த சுமை ஆட்டோ எதிா்பாராத விதமாக பூமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த அகல்யாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

தகவல் அறிந்த திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பி... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பூதலூா் அருகே கூத்தூா் உப்புக்காட்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. பச்சையப்பன் (65). இவரும் அதே பகுதி காளியம... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்! தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை!

இஸ்லாமியா்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூா் வடக்கு... மேலும் பார்க்க

இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

கும்பகோணம் அம்மாசத்திரத்தில் இந்திய அஞ்சல்துறை சாா்பில் சனிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்... மேலும் பார்க்க

ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிப்பட்டு உயிரிழந்தது சனிக்கிழமை தெரிய வந்தது. பூதலூா் - சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை ரூ. 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையில் ... மேலும் பார்க்க