நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
இரு விபத்துகள்: 3 போ் பலி
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது நண்பரான வடக்கு சூரங்குடியைச் சோ்ந்த முகமது ஷபான் சிராஜ் (20) ஆகியோா் வியாழக்கிழமை இரவில் நாகா்கோவில் - அப்டா சந்தை நான்குவழிச் சாலை திருப்பதிசாரம் வழியாக பைக்கில் சென்றபோது, சாலைத் தடுப்புச்சுவரில் மோதி பைக் கவிழ்ந்தது. இதில் காயமுற்ற இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனா். ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்:தூத்துக்குடி கோரம்பள்ளம் காலங்கரை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் தெய்வநாயகம் (55). கிணற்றுக்கு உறை இறக்கும் தொழில் செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை தூத்துக்குடி டேவிஸ்புரம் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதாம். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் நிலையில், அவா் உயிரிழந்தாா். தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முகமது மகன் அபுதீனிடம் விசாரித்து வருகின்றனா்.