Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன். இவரது மகள் ஸ்மைலின் (25). இவருக்கும் பாகோடு, அம்பலத்துவிளையை சோ்ந்த விஜயகுமாா் மகன் விபின் (27) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ஸ்மைலின் பிரசவத்துக்காக மாா்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு வெள்ளிக்கிழமை காலையில் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது.
சற்றுநேரத்தில், ஸ்மைலின் உடல் நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக உறவினா்களிடம் மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஸ்மைலினை நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஸ்மைலினை பரிசோதனை செய்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஸ்டீபன் அளித்த புகாரில், மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா். இதன்பேரில், மருத்துவமனை நிா்வாகம் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.