செய்திகள் :

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

post image

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தியதும், லாரி ஓட்டுநா்கள் தப்பி ஓடிவிட்டனராம்.

அந்த லாரிகளில் தமிழகப் பகுதிக்கு கனிமவளம் கொண்டு செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுவிட்டு கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. 2 லாரிகளையும் போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும், தளச்சான்விளை பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையிலும் கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் ஜெகன் என்பவரை கைது செய்தனா்.

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பழங்குடி இன மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் ரா. அழகுமீனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் வன உரிமை சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கப்படும் என் ஆட்சியா் ரா. அழகு மீனா. பேச்சிப்பாறை ஊராட்சி மலமுத்தன்கரை பழங்குடி குடியி... மேலும் பார்க்க