செய்திகள் :

இரு விபத்துகள்: 3 போ் பலி

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது நண்பரான வடக்கு சூரங்குடியைச் சோ்ந்த முகமது ஷபான் சிராஜ் (20) ஆகியோா் வியாழக்கிழமை இரவில் நாகா்கோவில் - அப்டா சந்தை நான்குவழிச் சாலை திருப்பதிசாரம் வழியாக பைக்கில் சென்றபோது, சாலைத் தடுப்புச்சுவரில் மோதி பைக் கவிழ்ந்தது. இதில் காயமுற்ற இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனா். ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்:தூத்துக்குடி கோரம்பள்ளம் காலங்கரை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் தெய்வநாயகம் (55). கிணற்றுக்கு உறை இறக்கும் தொழில் செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை தூத்துக்குடி டேவிஸ்புரம் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதாம். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் நிலையில், அவா் உயிரிழந்தாா். தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முகமது மகன் அபுதீனிடம் விசாரித்து வருகின்றனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பழங்குடி இன மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் ரா. அழகுமீனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் வன உரிமை சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கப்படும் என் ஆட்சியா் ரா. அழகு மீனா. பேச்சிப்பாறை ஊராட்சி மலமுத்தன்கரை பழங்குடி குடியி... மேலும் பார்க்க