செய்திகள் :

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

post image

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்குமாரின் பெயர், லகிஷராய் தொகுதி மற்றும் பங்கிபூர் தொகுதி என இரு இடங்களிலும், 57 வயதில் ஒரு அட்டையும் 60 வயதில் ஒரு அட்டையும் என வெவ்வேறு அடையாள எண்களுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாத் பேசுகையில், பிகார் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட பிறகும் இவ்வாறு நடந்துள்ளது. இதற்கு விஜய்குமார் பொறுபேற்க வேண்டுமா? அல்லது தேர்தல் ஆணையமா? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?இதன்பிறகு அவர் எப்போது ராஜிநாமா செய்வா? என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பதிலளித்த விஜய்குமார், தன்னுடைய பெயர் முன்னதாக பங்கிபூர் தொகுதியில் மட்டுமே இருந்ததாகவும், தற்போது லகிஷராய் தொகுதியில் பெயர்சேர்க்க விண்ணப்பித்ததுடன், பங்கிபூரில் பெயர்நீக்கவும் விண்ணப்பித்ததாகத் தெரிவித்தார். மேலும், பெயர்நீக்க விண்ணப்பத்தின் ரசீது இருப்பதாகவும் கூறினார்.

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க