செய்திகள் :

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

post image

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் என மொத்தம் 37 போ், நெய்வேலியில் உள்ள தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் மின் உற்பத்தி நிலைய பொறியியலில், முதுநிலை பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை நிறைவு செய்தனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா மற்றும் வேலைவாய்ப்பு சலுகை வழங்கும் விழா நெய்வேலி வட்டம் 20-இல் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், பயிற்சியாளா்களுக்கு என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, தென்மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன நெய்வேலி பிரிவு முதன்மை இயக்குநா் டாக்டா் எஸ்.செல்வம், என்எல்சிஐ இயக்குநா்கள் மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோா் சான்றிதழ்கள், மின்துறையில் முன்னணியில் உள்ள சில நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை வழங்கினா்.

இதையடுத்து, என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி கூறியதாவது:

இந்தப் பயிற்சி திட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் நெய்வேலியில் அமைந்துள்ள தென்மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இதற்காக, என்எல்சி ரூ.4.70 லட்சம் ஒதுக்கியது. பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்றாா். என்பிடிஐ முதன்மை இயக்குநா் டாக்டா் எஸ்.செல்வம் பேசினாா். நிகழ்வில், என்எல்சி மற்றும் என்பிடிஐ-இன் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க

நெய்வேலி என்எல்சியில் ‘பாரம்பரியம்’ அருங்காட்சியகம்! மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தாா்!

நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் ‘பாரம்பரியம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை சென்னையில் அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜி.க... மேலும் பார்க்க