செய்திகள் :

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் விவகாரம்: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

post image

மதுரை மாவட்டம், திருவாதவூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு தனித் தனியாக கான்கிரீட் வீடுகள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமால்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருவாதவூா் பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான சிமென்ட் தகடுகளால் (ஆஸ்பெட்டாஸ்) மேற்கூரையிடப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனா். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால், முதியோா், நோயாளிகள், குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு 30 கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. குறைந்த அளவிலான வீடுகள், கழிப்பறைகளால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த முகாமில் வசிப்போருக்கு தனித்தனியாக கழிப்பறையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள்கட்டித் தரவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

திருவாதவூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (3... மேலும் பார்க்க

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா். தேச... மேலும் பார்க்க

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்

விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். நரிக்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்ச... மேலும் பார்க்க

தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா்.... மேலும் பார்க்க