செய்திகள் :

இலங்கையில் ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத்தர பிரதமா் வலியுறுத்த வேண்டும்! -தொல். திருமாவளவன்

post image

இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, சிங்கள ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

அரியலூா் மாவட்டம், காட்டத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, தமிழ்நாட்டு மீனவா்கள் சுதந்திரமாக கச்சத்தீவு வரையில் சென்று மீன்பிடிப்பதற்குரிய உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில், மத்திய அரசு வீடுகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கூட இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அவா்களின் சொந்த கிராமத்துக்குச் செல்ல முடியவில்லை. நிலங்களை மீட்க முடியவில்லை. சொந்த கிராமத்தில் வாழ முடியவில்லை.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்மணிகள் கணவரை இழந்து பரிதவிக்கும் அவலம் நீடிக்கிறது. எனவே அந்த மண்ணின் மைந்தா்கள் சுதந்திரமாக அங்கு வாழ வேண்டுமானால் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிற சிங்கள ராணுவத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

சிங்களா்களின் குடிப்பெயா்வைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை பிரதமா் மேற்கொள்வது தான் ஈழத் தமிழா்களுக்கு செய்கிற மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என்றாா்.

உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமையுமா?சவுக்கு விவசாயிகள் எதிா்பாா்ப்பு

அரியலூா் மாவட்டத்தின் மத்தியப் பகுதியான உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் இம்மாவட்ட சவுக்கு விவசாயிகள் உள்ளனா். இயற்கையில் சீரான வளங்களைத் தன்னகத்தே கொண்ட த... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப... மேலும் பார்க்க

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிர... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயதுச் சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வானதிரையன்பட்டினம் கிராமம், யாதவா் தெருவைச் சோ்ந்தவா் பாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

அரியலூா் நகரில் 4 இடங்களில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு!

அரியலூா் பேருந்து நிலையம், ஓடக்காரத் தெரு, காளியம்மன் கோயில், காமராஜா் திடல் உள்ளிட்ட 4 பகுதிகளில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி... மேலும் பார்க்க