செய்திகள் :

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்

post image

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சகா்கள் ஏற்றினா்.

இந்த பத்து நாள்களிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாள்தோறும் சமயச் சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள், நாதஸ்வர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.12 ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.14 ஆம் தேதியும், ஏகாந்தச் சேவை நிகழ்வு ஏப்.15 ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஏப்.16 ஆம் தேதி மஞ்சள் நீா்பாலிகை நீா்த்துறை சோ்தலுடன் விழா நிறைவுடைகிறது.

ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, கோ. ராமதாஸ் படையாச்சி, கோ.வெங்கடாஜலபதி படையாச்சி குடும்பத்தினா் செய்கின்றனா். விழாவையொட்டி திருச்சி, அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கு... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் ஏப்.16, 17 இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற... மேலும் பார்க்க

ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி: தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

மீன்சுருட்டி அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி சங்கீதா(42). இவா் வீட... மேலும் பார்க்க

குப்பையில் எரிந்த நிலையில் சிசுவின் உடல் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. குழுமூா் கிராமத்தில் குப்பைகள் கொட்டுமிடத்தில், ஆண் சிசு ஒன்று எரிந்த நிலையில் கிடப்ப... மேலும் பார்க்க