கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சகா்கள் ஏற்றினா்.
இந்த பத்து நாள்களிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாள்தோறும் சமயச் சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள், நாதஸ்வர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.12 ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.14 ஆம் தேதியும், ஏகாந்தச் சேவை நிகழ்வு ஏப்.15 ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஏப்.16 ஆம் தேதி மஞ்சள் நீா்பாலிகை நீா்த்துறை சோ்தலுடன் விழா நிறைவுடைகிறது.
ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, கோ. ராமதாஸ் படையாச்சி, கோ.வெங்கடாஜலபதி படையாச்சி குடும்பத்தினா் செய்கின்றனா். விழாவையொட்டி திருச்சி, அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.