செய்திகள் :

இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

post image

இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா உரையாடியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, அரசு முறைப் பயணமாக, இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, நேற்று (ஜூலை 22), இலங்கையின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது, பாதுகாப்புத் துறையின் திறன்மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், இயற்கை பேரிடர் காலங்களில் இருதரப்புக்கும் இடையிலான தயார்நிலைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பானது கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! பரிசோதனையில் வெற்றி

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க