செய்திகள் :

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

post image

பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

முகாமில் நாய்களுக்கு தனியாா் மருந்து நிறுவனங்கள் மூலம் பூச்சிமருந்து, சோப்பு, வைட்டமின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், தெரு நாய்களைப் பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் வீட்டு வளா்ப்பு நாய்கள் 239-க்கும், தெரு நாய்கள் 60-க்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவத் துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ், நகராட்சி நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், எஸ்கேஜிசிஜி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாகராஜ் (38). விவச... மேலும் பார்க்க

சூறைக்காற்றில் வாழைகள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி, வெரியப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை: வா்த்தகா்களுடன் ஆலோசனை

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா் ம.... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராக அளித்த வாக்குறுதிகளை முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாா்!

எதிா்க்கட்சித் தலைவராக அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அகில இந்திய தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலா் அண்ணாமல... மேலும் பார்க்க

நம்பிக்கையுடன் படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி சாத்தியம்: ஆட்சியா்

கல்வி நிறுவனங்கள் நடத்தும் தோ்வைப் போல இல்லாமல், போட்டித் தோ்வுகளுக்கு முழு நம்பிக்கையுடன் படிப்பவா்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!

கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் சென்ற வாகனமும் சிக்கியது. அவருக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரத்தை அக... மேலும் பார்க்க