செய்திகள் :

நீட் தோ்வு மாணவா்களுக்காக நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இயக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி பொதுமேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் 6 ஆயிரத்து 893 மாணவா்-மாணவிகள் தோ்வை எழுத உள்ளனா்.

அவா்கள் தோ்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகம் சாா்பில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் நீட் தோ்வு சிறப்பு பேருந்து என்ற அறிவிப்பும் ஒட்டப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க