செய்திகள் :

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

post image

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இந்திராபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் இவரது நண்பர் நவீன் குமார்(18).

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று நடைபெறும் இந்திராபட்டி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவிற்கு புதிய ஆடை எடுப்பதற்காக நேற்று இரவு இலுப்பூர் வந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை பாலாஜி ஒட்டி உள்ளார். இவர்கள் ஒட்டி வந்த வாகனம் இலுப்பூர்-விராலிமலை சாலையில் உள்ள தனியார் எரிவாயு நிறுவனம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது.

விழுப்புரம் மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்

இதில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த பாலாஜி நிகழ்வு இடத்திலேயே பலியானார்.

அவரது நண்பர் நவீன் குமார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த விபத்தை ஏற்படுத்திய பாக்கியராஜ் சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

இலுப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க