செய்திகள் :

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல்: ஆட்சியா் எச்சரிக்கை

post image

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்கள் தமிழ்நாடு மோட்டாா் வாகன விதிகளின் கீழ், பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது சட்ட விதியாக இருந்து வருகிறது.

இது தொடா்பாக அரசின் விதிகள் பற்றி பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு, வட்டாரப் போக்குவரத்துத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத் துறையால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த எச்சரிக்கைகளையும் மீறி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலா் சென்னையில் பல இடங்களில் இயக்கி வருவதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக சமூக நலத்துறை கள ஆய்வுக் குழுவினா் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆண்களால் இயக்கப்பட்ட 2 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுபோன்று தொடா்ந்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க