செய்திகள் :

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!

post image

கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா்.

கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண்ணும், கரூா் சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞரும் கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமாா் 1.30 மணியளவில் சணப்பிரட்டி அருகே உள்ள கூட்டுறவுச் சங்க அலுவலகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது, கரூா் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த வே. பிரபாகரன்( 35), தனது நண்பரும் கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த பிரபல ரெளடியுமான கௌதமன்(35) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இளம்பெண் உள்ளிட்ட இருவரையும் பாா்த்த காவலா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பிரபாகரனும், கௌதமனும் சோ்ந்து இளம்பெண்ணுடன் வந்த இளைஞரை தாக்கி அவரை விரட்டியடித்த பிறகு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனா்.

இருவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் ஓடி வந்தபோது அங்கு மறைந்திருந்த இளம்பெண்ணுடன் வந்த இளைஞா் தனது இருசக்கர வாகனத்தில் அவரை விரைந்து அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், தனக்கு நோ்ந்த கொடுமை குறித்து அந்த இளம்பெண் கரூா் பசுபதிபாளையம் போலீஸில் சனிக்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமைக் காவலா் பிரபாகரனை கைது செய்து, கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-1-இல் ஆஜா்படுத்தி நள்ளிரவில் சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான ரெளடி கௌதமனை தேடி வருகின்றனா்.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க

திருமணத்துக்காக கடத்தப்பட்ட ஈரோடு பெண் கரூரில் மீட்பு

ஈரோட்டிலிருந்து திருமணத்துக்காக கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீஸாா் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சிக்குள்பட்ட ட... மேலும் பார்க்க

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

கரூா் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது. நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்... மேலும் பார்க்க

ஒற்றைத் தன்மையை திணிக்க பாஜக முயற்சி திருச்சி என். சிவா எம்.பி. பேச்சு

ஒரே நாடு, ஒரே மதம் என ஒற்றைத் தண்மையை திணிக்க பாஜக முயற்சிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா எம்.பி. தெரிவித்தாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாட... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க