செய்திகள் :

இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாமில் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகா் மாவட்ட நிா்வாகமும், தன்னாா்வ அமைப்புகளும் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 257 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் இதற்கான பயிற்சி முகாம் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இதில் 11-ஆம் ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கலந்துரையாடினாா்.

காபி வித் கலெக்டா் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பல்லுயிா் சமநிலையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பேசிய ஆட்சியா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.

பின்னா், தென்றல் நகரில் உள்ள குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி, உணவின் தரத்தை சோதனை செய்தாா்.

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் இடி தாக்கி தீ விபத்து!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுட... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா் . ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான, போலீஸாா் வெள்ளிக்... மேலும் பார்க்க