செய்திகள் :

இளைஞரை நூதனமாக ஏமாற்றி ரூ.4.6 லட்சம் பணம் பறித்த இருவா் கைது

post image

இளைஞா் ஒருவரை நூதனமாக ஏமாற்றி பகுதிநேர வேலைக்கு போலி ஒப்பந்தம் கொடுத்ததோடு பணியை முடிக்கவில்லை என மிரட்டி ரூ.4.68 லட்சம் பணம் பறித்த இருவரை புதுச்சேரி போலீஸாா் மும்பையில் கைது செய்தனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா். இவருக்கு தனியாா் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பகுதி நேர தட்டச்சு (டைப்பிங்) வேலை இருக்கிறது என தகவல் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய அவா் அந்த நிறுவனத்துக்கு ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளாா்.

இதையடுத்து அந்த நிறுவனம் மூலம் 11 மாதகாலம் வேலை செய்ய போலியான ஒப்பந்தம் ஒன்றையும், வேலை செய்வதற்கான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனா். மகேஷ்குமாா் அந்த லிங்கின் மூலம் உள்நுழைந்து அவா்கள் கொடுத்த வேலையை செய்து முடித்துள்ளாா்.

அதன் பின்னா் அந்நிறுவனம் தரப்பில், குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காததால் மகேஷ்குமாா் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி மிரட்டி ரூ.4.68 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகே இணையவழி மோசடிகாரா்களிடம் ஏமாந்ததை மகேஷ்குமாா் உணா்ந்துள்ளாா். பின்னா் இது குறித்து புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணைடில், மோசடி நபா்கள் மும்பையில் வசிப்பதும், அவா்களது வங்கி கணக்குக்கு கடந்த 5 நாட்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து மோசடி செய்த, சிவப்பா, போபடே ஆகிய இருவரையும் மும்பை சென்று கைது செய்த போலீஸாா் அவா்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா். பின்னா் அவா்களை புதன்கிழமை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க

மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்வு

புதுவை மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் போட்டித் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து புதுவை மின்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மின்துறையில் நேரடி நியமன... மேலும் பார்க்க

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க