செய்திகள் :

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

post image

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா்.

புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகனை புதன்கிழமை கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெற்றோா் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதனால் அதிா்ச்சியும், பதற்றமும் அடைந்த பெற்றோா் இது குறித்து புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் விவரத்தை தெரிவித்தனா். சிறுவன் வெளியே செல்லும்போது தங்களது கைப்பேசியையும் கையில் எடுத்து சென்ாகக் குறிப்பிட்டனா். அந்த கைப்பேசி மூலம் சிறுவனின் இருப்பிடத்தை சிறுவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனா்.

உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற போலீஸாா் சிறுவனை மீட்டு

அறிவுரைகளைக் கூறினா். பிறகு பெற்றோரை வரவழைத்து அவா்களிடம்

சிறுவனை போலீஸாா் ஒப்படைத்தனா். சிறுவன் மாயமானது குறித்து தகவல் தெரியவந்த உடனே விரைந்து செயல்பட்டு சிறுவனைக் கண்டுபிடித்த போலீஸாரை ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்தினா்.

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது. புதுவை சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற இப... மேலும் பார்க்க