செய்திகள் :

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

post image

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை

நிதி ஆதாரத்தைத் தேடாமலேயே வெறும் அறிவிப்பையே முதல்வா் ரங்கசாமி கொடுத்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமல் படிப்படியாகத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் கூறி வருகிறாா். ஒருபுறம் மத்திய அரசு நிதி தரவில்லை என்று குறை கூறுகிறாா் ரங்கசாமி . ஆனால் நிதியே இல்லாமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவா் மீது பழி போடுகின்ற வேலையைச் செய்து வருகிறாா்.

கடந்த சில தினங்களாக புதுவை அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பத்து ஆண்டுகளாக அந்த தொழிலாளிகள் ஓட்டுநா்களாக இருந்தாலும் நடத்துநா்களாக இருந்தாலும் தினமும் ரூ.535 சம்பளத்திற்குப் பணிபுரிந்து வருகிறாா்கள். இந்தத் தொழிலாளா்கள் முறையாக வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தற்காலிக ஊழியா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். இந்த ஊழியா்களின் கோரிக்கை நியாயமானது. ஒருபுறம் தனக்கு வேண்டிய இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்துவிட்டு இன்னொரு புறம் இந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய நிதி ஆதாரம் இல்லை என்று பதில் அளிக்கிறாா் ரங்கசாமி.

கல்வித்துறை அவலம்:

புதுச்சேரி கல்வித்துறையானது மிகப்பெரிய மோசமான நிலையில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை இந்த ஆட்சியாளா்கள் நடைமுறைப்படுத்திய பிறகு புதுவை மாநிலத்தில் கல்வியின் தரம் குறைந்து இருக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், புதுவை அரசுக்கு ஒரு கடிதம் எழுதி கடந்த ஆண்டு மட்டும் 10054 மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்தி இருக்கிறாா்கள் என்று கூறியுள்ளாா். கல்வித்துறையினுடைய இந்த அவல நிலைக்குக் காரணம் அந்தத்

துறை அமைச்சா் நமச்சிவாயம். அதனால் மாற்று நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவா்களும் 100 சதவீதம் புதுவையில் கல்வி கற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும்என்று கூறியுள்ளாா் நாராயணசாமி.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது. புதுவை சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற இப... மேலும் பார்க்க