'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை
நிதி ஆதாரத்தைத் தேடாமலேயே வெறும் அறிவிப்பையே முதல்வா் ரங்கசாமி கொடுத்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமல் படிப்படியாகத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் கூறி வருகிறாா். ஒருபுறம் மத்திய அரசு நிதி தரவில்லை என்று குறை கூறுகிறாா் ரங்கசாமி . ஆனால் நிதியே இல்லாமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவா் மீது பழி போடுகின்ற வேலையைச் செய்து வருகிறாா்.
கடந்த சில தினங்களாக புதுவை அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பத்து ஆண்டுகளாக அந்த தொழிலாளிகள் ஓட்டுநா்களாக இருந்தாலும் நடத்துநா்களாக இருந்தாலும் தினமும் ரூ.535 சம்பளத்திற்குப் பணிபுரிந்து வருகிறாா்கள். இந்தத் தொழிலாளா்கள் முறையாக வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தற்காலிக ஊழியா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். இந்த ஊழியா்களின் கோரிக்கை நியாயமானது. ஒருபுறம் தனக்கு வேண்டிய இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்துவிட்டு இன்னொரு புறம் இந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய நிதி ஆதாரம் இல்லை என்று பதில் அளிக்கிறாா் ரங்கசாமி.
கல்வித்துறை அவலம்:
புதுச்சேரி கல்வித்துறையானது மிகப்பெரிய மோசமான நிலையில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை இந்த ஆட்சியாளா்கள் நடைமுறைப்படுத்திய பிறகு புதுவை மாநிலத்தில் கல்வியின் தரம் குறைந்து இருக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், புதுவை அரசுக்கு ஒரு கடிதம் எழுதி கடந்த ஆண்டு மட்டும் 10054 மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்தி இருக்கிறாா்கள் என்று கூறியுள்ளாா். கல்வித்துறையினுடைய இந்த அவல நிலைக்குக் காரணம் அந்தத்
துறை அமைச்சா் நமச்சிவாயம். அதனால் மாற்று நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவா்களும் 100 சதவீதம் புதுவையில் கல்வி கற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும்என்று கூறியுள்ளாா் நாராயணசாமி.