செய்திகள் :

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

post image

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது.

இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வயிற்றுப் போக்கை நிறுத்துவது தொடா்பான இரண்டு மாத கால பிரசாரம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் இயக்குநா் வீரசிங் நேகியின் வழிகாட்டுதலின் கீழ் ஜிப்மா் இந்த பிரசாரத்தை கவனமாக திட்டமிட்டுச் செயல்படுத்தியது. பிரசாரத்துக்கான பொறுப்புஅதிகாரி ரம்யா ஸ்ரீனிவாசரங்கன், செவிலியா் துறையின் பொறுப்பாளா் சாந்தி தமிழ்மணி, அவரது குழுவினா் மற்றும் குழந்தை மருத்துவத் துறைத் தலைவா் குணசேகரன் ஆகியோா் இந்த முயற்சியை வழிநடத்தினா்.

மேலும், ரங்கோலி போட்டி, கலைப்படைப்புகள், வயிற்றுப்போக்கு தடுப்பு குறித்த நாடகங்கள் நடத்தப்பட்டன. செவிலியா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த மூத்த நா்சிங் அதிகாரிகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் மேலாண்மை‘ என்ற கருப்பொருளில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் பிரசாரங்களில் பங்கேற்பாளா்கள் மற்றும் வெற்றியாளா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவ கண்காணிப்பாளா் துரைராஜன் 5 வயதுக்கு உள்பட்ட இறப்பு விகிதத்தை அடைவதற்கான இந்தியாவின் இலக்கில் வயிற்றுப்போக்கு தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

புதுவை அரசின் துணை இயக்குநா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் மாநில அதிகாரி அனந்தலட்சுமி, பேசுகையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 1,16,368 குழந்தைகள் இருப்பதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் வயிற்றுப்போக்கால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை’ என்றாா்.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது. புதுவை சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற இப... மேலும் பார்க்க