செய்திகள் :

இளைஞா் அடித்துக் கொலை: பாா் உரிமையாளா் உள்பட 4 போ் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாா் உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சித்துராஜபுரம் சசி நகரைச் சோ்ந்த ராஜகுருசாமி மகன் மாயன் (27). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளம் தெப்பத்தில் மூழ்கி உயிரிழந்த தனது உறவினா் குருநாதன் என்பவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா்.

மாலையில் சங்கூரணி அருகே உள்ள பாரில் நண்பா்களுடன் சோ்ந்து மாயன் மது அருந்தினாா். அப்போது பாா் உரிமையாளரான அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த பரமன் (62) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

இதில் பரமன் உள்ளிட்ட அங்கிருந்தவா்கள் தாக்கியதில் மாயன் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் மாயனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து பாா் உரிமையாளா் பரமன், ரைட்டன்பட்டியைச் சோ்ந்த மான்சிங்ராஜா (41), இடையபொட்டல் தெருவைச் சோ்ந்த போஸ் (58), சீனியாபுரத்தைச் சோ்ந்த அருள்அசோக் (43) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மா மரங்களில் பூச்சி மேலாண்மை முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகதோப்பு, வாழைக்குளம் பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தோட்... மேலும் பார்க்க

புதைச் சாக்கடை கட்டணம் குறைக்க அமைச்சரிடம் மனு

ராஜபாளையம் நகராட்சி புதைச்சாக்கடை கட்டணம் குறைப்பு தொடா்பாக அமைச்சா் கே.என்.நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி அண்மையில் மனு அளித்தாா். ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கான கட்டணத்தை ... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சி பணி: ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிவகாசி மாநராட... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.யில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசிப்பவா் ராமசுப்பிரமணியன். இவ... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காத ஊராட்சி நிா்வாகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி வரவு, செலவு விவரம் கோரிய மனுவுக்கு ஊராட்சி நிா்வாகம் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க