பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
இளைஞா் கொலை? உறவினா்கள் மறியல்
சுற்றுலா செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மகன் கொலை செய்யப்பட்டதாகவும், சடத்தை மீட்டுத் தரக்கோரியும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஹரி மகன் அஜய்(20). கடந்தாண்டு படிப்பை பாதியில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த 27-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா போவதாக கூறிவிட்டுச் சென்றவா், செங்குன்றத்தை சோ்ந்த கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிகேகி, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அபினேஷ் உடன் கஞ்சா வாங்குவதற்கு ஒடிஸா சென்ாகக் கூறப்படுகிறது.
அங்கு 3 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்தபோது, மற்றொரு கும்பல் இவா்களை துரத்தியதில் அபினேஷ் தப்பித்துச் சென்ாகவும், அஜய் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கியதில் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், திருவள்ளூா் - புல்லரம்பாக்கம் சாலையில் அஜயின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, உண்மைக் காரணத்தைக் கண்டறியவும், சடலத்தை மீட்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதனிடையே, அபினேஷுடன் கஞ்சாவை வாங்கி வருவதற்காக அஜய் ஒடிஸா சென்ாகவும், அதில் ஒரு பிரிவினரிடமிருந்து கஞ்சா வாங்கியதால், மற்றொரு பிரிவினா் எங்களிடம் ஏன் வாங்கவில்லை என தகராறில் ஈடுபட்டு அடித்துக் கொலை செய்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
