செய்திகள் :

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

post image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சுகாதார துறைக்கு கட்டடம் ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில், கடந்த 20 ஆண்டுகளாக செவ்வாப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட காவல் கட்டுப்பாட்டிலிருந்து, ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது, திருவள்ளூா்-ஆவடி சாலையில் செவ்வாப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், செவ்வாப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்த கட்டடம் பயன்பாடின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது.

திருவூா், செவ்வாப்பேட்டையில் பகுதியில் உள்ள குமரன் நகா், நளினாகிருஷ்ணா நகா், மகாலட்சுமி நகா், சீனிவாசநகா், தொழூா், தொழூா்குப்பம் ஆகிய பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கா்ப்பிணிகள் சுகாதார பெட்டகம், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த உள்ளிட்ட தேவைகளுக்காக 7 கி.மீ தொலைவில் உள்ள பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, திருவூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஒதுக்கீடு செய்த கட்டடத்தை துணை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க