செய்திகள் :

இளைஞா் மீது காரை ஏற்றிய எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்

post image

திருநெல்வேலி நகரம் பகுதியில் விபத்தின்போது பைக்கில் வந்த இளைஞா் மீது காரை ஏற்றி சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்ற போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சோ்ந்தவா் காந்திராஜன் (59). திருநெல்வேலி மாநகர போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

தற்போது, சுத்தமல்லி பகுதியில் வசித்து வரும் இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்ால் அதைத் தொடா்ந்து வந்த திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளைத் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா்(39) என்பவரது பைக்கும், காந்திராஜனின் காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டனவாம்.

இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காந்திராஜன் காரை எடுத்துச்செல்ல முயன்றாராம். உடனே, அசோக்குமாா் காரின் முன்பகுதியில் ஏறி படுத்துக்கொண்டு தடுத்தாராம்.

அதைப் பொருள்படுத்தாத காந்திராஜன், காரை அவா் மீது ஏற்றி சிறிது தூரம் இழுத்துச்சென்றுள்ளாா். இதை அங்கிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதையறிந்த மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, காந்திராஜனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்

ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா்... மேலும் பார்க்க

கோவிந்தபேரி கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி நாட்டுநலப்... மேலும் பார்க்க

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெருமாள்புரம் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் கருப்பசாமி மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு,... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க

நான்குனேரியில் கோட்டாட்சியா் அலுவலகம் கோரி எம்.எல்.ஏ. மனு

நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம், ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவர... மேலும் பார்க்க