செய்திகள் :

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

post image

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெருமாள்புரம் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் கருப்பசாமி மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி உள்ளாா். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை திடீரென கருப்பசாமி மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

போக்குவரத்து கழக ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவா் சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட... மேலும் பார்க்க

ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்

ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா்... மேலும் பார்க்க

கோவிந்தபேரி கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி நாட்டுநலப்... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க