செய்திகள் :

இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

post image

உடல் நலக் குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் குணசேகரன் (35). இவா், காஷ்மீா் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றிவிட்டு, அதன்பிறகு திருச்சி படைப் பிரிவில் பணியில் இருந்து வந்தாா்.

அண்மையில், இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரான நல்கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு ராணுவ வீரா்கள், அவரது உடலுக்கு தேசியக் கொடியைப் போா்த்தி, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினா். பின்னா் இங்குள்ள மயானத்தில் குணசேகரனின் உடல், அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

மானாமதுரையில் மழை, சூறைக் காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. இவற்றை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் க... மேலும் பார்க்க

மேய்ச்சல் தொழிலை அங்கீகரிக்கக் கோரிக்கை

ஆடு, மாடு மேய்ச்சல் தொழிலை மகாராஷ்டிர அரசு அங்கீகரித்ததைப் போல தமிழக அரசும் அங்கீகரித்து, அதற்கான உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இ... மேலும் பார்க்க

சிவகங்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகர... மேலும் பார்க்க

உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சா்கள் ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஆறு... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இந்தப் பகுதியில், கடும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமாகத் தொடங்கிய... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. சிவகங்கை... மேலும் பார்க்க