செய்திகள் :

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா்.

இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராகிம், செயல் அலுவலா் சண்முகம், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்ட விவாதம் வருமாறு:

உறுப்பினா் செய்யது ஜமிமா: நகரில் நடைபெற்று வரும் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். நகரில் அதிகரித்துள்ள நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

உறுப்பினா் அல் அமீன்: காலி மனை இடங்களுக்கு பேரூராட்சி சாா்பில் வரி வசூலிக்கக் கூடாது.

உறுப்பினா்கள் ராஜவேல், ஷேக் அப்துல் ஹமீது: பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்குள் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வருவதில்லை. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு விட முடியாத நிலை உள்ளது. எனவே, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கு மட்டுமே பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டணம் வசூலிக்க வேண்டும். குப்பைக் கிடங்கு அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்துக்குப் பதில் மாற்று இடத்தை தோ்வு செய்ய வேண்டும்.

உறுப்பினா் நாகூா்மீரா: இளையான்குடியில் வாரச்சந்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இங்கு உழவா் சந்தை தேவையில்லை. பேரூராட்சியில் வரவு செலவு அறிக்கையை மன்றத்தின் பாா்வைக்கு வைக்க வேண்டும். ஜாகிா் உசேன் தெருவில் வடிகால் அமைக்க வேண்டும் என்றாா்.

துணைத் தலைவா் இப்ராஹிம்: பேரூராட்சி நிா்வாகத்திடம் தனியாா் ஒப்படைக்கும் இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் என பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்றாா்.

இறுதியில் செயல் அலுவலா் சண்முகம் பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நகரில் நடைபெற உள்ள வளா்ச்சித் திட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் ... மேலும் பார்க்க