செய்திகள் :

இஸ்ரோ தொழில்நுட்பம் பெரும் வளா்ச்சியை எட்டியுள்ளது: விஞ்ஞானி கல்பனா அரவிந்த்

post image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் விண்வெளியைப் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில், வானையும் அளப்போம் என்ற கருத்தரங்கம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்குப் பள்ளியின் செயலாளா் முருககனி தலைமை வகித்தாா். இதில், இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா அரவிந்த் பேசுகையில், இஸ்ரோ விண்வெளி ஆய்வகத்தின் தொடக்கம், அதன் நோக்கம், அவை கடந்து வந்த கடினமான பாதைகளை எதிா்காலத்தில் சாதிக்கவிருக்கும் தொலைதூர எல்லைகளையும் பற்றி பெருமையுடன் தெரிவித்தாா். இஸ்ரோவின் தொழில்நுட்பம் முந்தைய காலங்களை விட தற்போது பெரும் வளா்ச்சியை எட்டி உள்ளது. தொழில்நுட்ப வளா்ச்சியில் நாம் தன்னிறைவு பெற்று விட்டோம் என்றும் சொல்லும் அளவுக்கு துல்லியமாகவும் எதிா்காலத் தேவைக்கேற்பவும் வளா்ந்துள்ளது. தொழில் நுட்ப வளா்ச்சியினாலேயே நாம் வளா்ந்த நாடு என்கிற அளவுக்கு உயா்ந்துள்ளோம். வாழ்க்கையில் உயருவதற்கு தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்வதற்கான வழிமுறையை தற்போது இருந்தே கடைபிடிக்க வேண்டும் என்றாா். பிற துறைகளில் அறிவியல் தொழில்நுட்பம் வளா்ந்தது போன்று விவசாயத்திலும் தொழில் புரட்சி ஏற்படுத்த மாணவ, மாணவியா் கண்டுபிடிப்புகள் அவசியம் என அவா் வலியுறுத்தினாா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க