செய்திகள் :

ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

post image

ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள் கட்டப்படும் என நேற்று (ஜூன் 9) அந்நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 8 அணு உலைகளில் 4 உலைகள் ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள புஷேர் மாகாணத்தில் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், புஷேர் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 2,3 உலைகள் ஈரான் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவின் உதவியோடு கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையம் ஈரானில் நாட்டில் இயங்கிவரும் முதல் மற்றும் ஒரே அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க